கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை


கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
x
தினத்தந்தி 28 Oct 2020 5:21 AM GMT (Updated: 28 Oct 2020 5:21 AM GMT)

பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது என்பது குறித்து முதலமைச்சர் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.  தமிழகத்தில் பொது போக்குவரத்து ஏறத்தாழ முழுவதுமாக தொடங்கியுள்ளது. தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும்  31-ம் தேதியுடன்  நிறைவடைய உள்ளது. 

ஒவ்வொரு முறை ஊரடங்கு முடியும் முன்பாக மருத்துவ நிபுணர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல் அமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனைக்குப் பிறகே தளர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.  

இந்த நிலையில்,  சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி வழியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். காலை 10.30 மணியளவில் இந்த ஆலோசனை தொடங்கியது. 

 நவம்பர் மாதம் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்தும், பல்வேறு புதிய தளர்வுகளை வழங்குவது குறித்தும் ஆலோசனை செய்யப்படலாம் எனத்தெரிகிறது. 

Next Story