தமிழகத்தில் மேலும் 2,511 பேருக்கு கொரோனா தொற்று


தமிழகத்தில் மேலும் 2,511 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 31 Oct 2020 2:20 PM GMT (Updated: 31 Oct 2020 2:20 PM GMT)

தமிழகத்தில் மேலும் 2,511- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த சில வாரங்களாகவே குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.  தமிழகத்தில் இன்று புதிதாக 2 ஆயிரத்து 511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 24 ஆயிரத்து 522 ஆக உள்ளது.

 சென்னையில் இன்று  கொரோனா  பாதித்தவர்கள் எண்ணிக்கை 690- ஆக  உள்ளது.  கொரோனா பாதிப்பால் இன்று ஒருநாளில் மட்டும் 31 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11,122  ஆக உயர்ந்துள்ளது. 

தொற்று பாதிப்புடன் தமிழகத்தில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 22 ஆயிரத்து 164 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து இன்று ஒரு நாளில் மட்டும் 3,848 பேர் வீடு திரும்பியுள்ளனர். 

Next Story