தமிழகத்தில் புதிதாக மேலும் 2,341 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


தமிழகத்தில் புதிதாக மேலும் 2,341 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 7 Nov 2020 12:58 PM GMT (Updated: 7 Nov 2020 12:58 PM GMT)

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 15-வது நாளாக 3 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி உள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இதன்படி தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு தொடர்ந்து 15வது  நாளாக 3 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி உள்ளது. 

சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று புதிதாக 2,341 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,41,488 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 25 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,324 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 2,352 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,11,198 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 18,966 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று புதிதாக 603 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்ட்ங்களில் 1,738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Next Story