பெட்ரோல், டீசல் விலை உயர்வு


பெட்ரோல், டீசல் விலை உயர்வு
x

சென்னையில் 59 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக இவற்றின் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பன செய்யப்பட்டு வருகிறது.  இதன்படி, சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 84.14 ரூபாய், டீசல் லிட்டர் 75.95 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், இன்று (20-ம்தேதி)  பெட்ரோல் லிட்டருக்கு 17 காசுகள் அதிகரித்து ரூ.84.31-க்கும், டீசல் லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ரூ.76.17-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 59 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story