சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது


சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது
x
தினத்தந்தி 21 Nov 2020 3:18 AM GMT (Updated: 21 Nov 2020 3:18 AM GMT)

சென்னையில் சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது.

சென்னை,  

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த 18-ம் தேதி தொடங்கியது. அன்று முதல் நேற்று வரை அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெற்றது.

இந்நிலையில், சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று காலை 9 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இந்த கலந்தாய்வில் பங்கேற்கின்றனர். வரும் 23-ம்தேதி பொது பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது.

Next Story