இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக இவற்றின் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனைத்தொடர்ந்து சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 84.46 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 76.37 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று (22-ம்தேதி) பெட்ரோல் லிட்டருக்கு 7 காசுகள் அதிகரித்து ரூ.84.53-க்கும், டீசல் லிட்டருக்கு 18 காசுகள் அதிகரித்து ரூ.76.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்களுக்கு போராட்டம் நடத்தப்படும் என அந்த கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.