நிவர் புயல்சென்னை புகைப்படங்கள்


நிவர் புயல்சென்னை புகைப்படங்கள்
x
தினத்தந்தி 25 Nov 2020 9:07 PM GMT (Updated: 25 Nov 2020 9:07 PM GMT)

நிவர்புயல் காரணமாக சென்னையில் வெறிச்சோடியபகுதிகளும், மெரினா கடற்கரையும்

சென்னை

அதி தீவிர புயலான நிவர் புயல் கரையைக் கடக்கத்தொடங்கியுள்ளது.   புயல் முழுமையாக கரையை கடக்க அதிகாலை 3 மணிக்கு மேல் ஆகும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

நிவர் புயலால் சென்னை மெரினா கடற்கரையும் மற்றபகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன.


சென்னையில் நேற்று மதியம் பேய்க்காற்றுடன் பலத்த மழை பெய்தபோது, மரங்கள் தலைவிரித்து ஆடியதை படத்தில் காணலாம்
( இடம்- மெரினா).



சென்னையில் நேற்று மதியம் பேய்க்காற்றுடன் பலத்த மழை பெய்தபோது, மரங்கள் தலைவிரித்து ஆடியதை படத்தில் காணலாம்
( இடம்- மெரினா).



சென்னை மெரினா கடற்கரை சாலையில் சாய்ந்த மரங்களை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பார்வையிட்ட போது எடுத்த படம்.



சென்னை மெரினா கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களிடம், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ,இது இயற்கையை ரசிக்கும் நேரம் அல்ல. ஆபத்தான நேரம் என்று கூறி அறிவுரை வழங்கிய காட்சி.


சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் அவசர கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ' நிவர்' புயல் நகர்வுகள் குறித்து நிருபர்களிடம் விளக்கிய காட்சி.































கடந்த 8 மாதமாக கொரோனா பரவுகிறது என்றார்கள், இப்போது 5 நாட்களாக நிவர் புயல் வருகிறது என்கிறார்கள், என்னடா வாழ்க்கை என்ற சோகத்தில் அமர்ந்திருக்கும் பெண். (இடம் : அயனாவரம்)


சென்னை பட்டாளம் ஆஞ்சநேயர் கோவில் முன்பு சூழ்ந்த மழை வெள்ளம்



கொரானா ஊரடங்கு போல நிவர் புயலின்  காலரணமாக காலியான மவுண்ட் பூந்தமல்லி சாலை இடம் போரூர்

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் அவசர கட்டுப்பாட்டு மையம் பரபரப்பாக இயங்கிய காட்சி.



சென்னை மெரினா கடற்கரை சாலை மூடப்பட்டு வெறிச்சோடி இருந்ததையும், அங்கு பெண் போலீஸ் ஒருவர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்ததையும் படத்தில் காணலாம்.


சென்னை மெரினா கடற்கரை சாலைக்கு செல்லும் நுழைவு மூடப்பட்டு இருப்பதையும்,  வாகன ஓட்டிகளை  போலீசார் திருப்பி அனுப்பியதையும் படத்தில் காணலாம்.



Next Story