அதிமுக கூட்டணி குறித்து தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பதில்


அதிமுக கூட்டணி குறித்து தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பதில்
x
தினத்தந்தி 27 Nov 2020 11:14 AM GMT (Updated: 27 Nov 2020 11:14 AM GMT)

தற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக இருக்கிறது என தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறி உள்ளார்.

சென்னை


நிவர் புயல் காரணமாக சென்னை புறநகர் பகுதியில் பெய்த தொடர் கனமழை காரணமாக சென்னையை அடுத்த செம்மஞ்சேரி பகுதியில் உள்ள 5000 மேற்பட்ட சுனாமி குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குடியிருப்புகளை சுற்றி வெள்ள நீர் மூன்றாவது நாளாக சூழ்ந்திருப்பதால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.. 

செம்மஞ்சேரியில் வெள்ளநீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் மக்களை சந்தித்த தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

நிவர் புயல் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது, இருப்பினும் தாழ்வான பகுதியாக உள்ள இந்த செம்மஞ்சேரியில் மழை பெய்தால்  நீர் சூழும்சூழல் இருப்பதால்  இதனை சரி செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரினார். 

தற்போது வரை பாஜக அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர்வதாகவும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு குறித்து ஜனவரி மாதம் நடைபெறக்கூடிய பொதுக்குழுவுக்கு பின் அறிவிக்கப்படும். கூட்டணி குறித்து விஜயகாந்த் அறிவிப்பார் என கூறினார்.

Next Story