அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சேதம் ஏற்படவில்லை - முதல்வர் பழனிசாமி


அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சேதம் ஏற்படவில்லை - முதல்வர் பழனிசாமி
x
தினத்தந்தி 28 Nov 2020 6:15 AM GMT (Updated: 28 Nov 2020 6:15 AM GMT)

அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நிவர் புயலால் பெரிய அளவுக்கு சேதம் ஏற்படவில்லை என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை,

முதல்வர் பழனிசாமி இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
  • அனைத்து துறை செயல்பாட்டில் தமிழகம் முதலிடம் என்பது மகிழ்ச்சி தருகிறது.
  • ஆந்திராவில் பெய்த மழையால் தமிழகத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது
  • தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • இனி வரும் காலங்களில் மழை நீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் முன்களப் பணியாளர்களின் சிறப்பான பணியால் தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
  • டிசம்பர் 15ஆம் தேதிக்குள் 2000 மினி கிளினிக் துவக்கப்படும்

Next Story