அரையாண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படுமா?- அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்


அரையாண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படுமா?- அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
x
தினத்தந்தி 28 Nov 2020 6:44 AM GMT (Updated: 28 Nov 2020 6:44 AM GMT)

அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறுவது மக்கள் கையில்தான் உள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* தமிழகத்தில் பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நாளை மறுநாள் அறிக்கை வழங்கப்படும்.

* முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை தந்த 5 நாளில் பாடத்திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும்.

* அரையாண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்ற தகவல் தவறானது.

* அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறுவது மக்கள் கையில்தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story