பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு: வாகன ஓட்டிகள் கலக்கம்


பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு: வாகன ஓட்டிகள் கலக்கம்
x
தினத்தந்தி 29 Nov 2020 2:28 AM GMT (Updated: 29 Nov 2020 2:28 AM GMT)

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னை,

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணையித்துக்கொள்கின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைப்பதை எண்ணெய் நிறுவனங்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளன. 

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 9 நாட்களில் 8-வது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  பெட்ரோல் விலை லிட்டருக்கு  இன்று 19 காசுகளும் டீசல் விலை 28 காசுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.31-க்கும்  டீசல் ரூ.77.84-க்கும் விற்பனையாகிறது. 

Next Story