திருவண்ணாமலை,திருச்சி, பழநி கோவில்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது


திருவண்ணாமலை,திருச்சி, பழநி கோவில்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது
x
தினத்தந்தி 29 Nov 2020 1:26 PM GMT (Updated: 29 Nov 2020 1:26 PM GMT)

திருவண்ணாமலை,திருச்சி, பழநி உள்ளிட்ட கோவில்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

சென்னை,

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.  

திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவிலில் பிரம்மாண்ட கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. 900 லி. நல்லெண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் 300 மீ. பருத்தி திரியில் தீபம் ஏற்றப்பட்டது.  திரி இடப்பட்ட கொப்பரையில் பூா்வாங்க பூஜைகள் நடத்தப்பட்டதையடுத்து, கார்த்திகை மாத பெளா்ணமி நாளான இன்று மாலை இதில் பிரம்மாண்ட தீபம் ஏற்றப்பட்டது.

பழநி முருகன் கோவில் மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதிலும் மகா தீபம் ஏற்றப்பட்டது. 

Next Story