தென் தமிழகத்தில் டிச.1 முதல் 4-ம் தேதி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு


தென் தமிழகத்தில் டிச.1 முதல் 4-ம் தேதி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 30 Nov 2020 7:43 AM GMT (Updated: 30 Nov 2020 7:43 AM GMT)

தென் தமிழகத்தில் டிச.1 முதல் 4-ம் தேதி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தென் தமிழகத்தில் டிச.1 முதல் 4-ம் தேதி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 சென்னை வானிலை ஆய்வு மையம் மேலும் கூறுகையில், “தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. இது புயலாக மாறி, வரும் 2-ம் தேதி இலங்கையில் கரையை கடக்கும். 

பின்னர் குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. எனவே, தென்மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” என்று தெரிவித்துள்ளது. 

Next Story