புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும் என கணிப்பு - அமைச்சர் உதயகுமார்


புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும் என கணிப்பு - அமைச்சர் உதயகுமார்
x
தினத்தந்தி 1 Dec 2020 6:01 AM GMT (Updated: 1 Dec 2020 6:01 AM GMT)

வங்கக்கடலில் உருவாகும் புதிய புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

சென்னை, 

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

  • வங்கக்கடலில் உருவாகும் புதிய புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
  • ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் கரை திரும்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • கர்நாடகா, கேரளா, கோவா, லட்சத்தீவு பகுதிகளில் பாதுகாப்பாக கரை ஒதுங்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
  • நிவர் புயல் சேதங்களை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று மாலை தமிழகம் வரும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story