தமிழகத்தில் 2,600 இடங்களில் கொரோனா தடுப்பு மருந்து சேமிப்பதற்கான கட்டுமான வசதி - பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்


தமிழகத்தில் 2,600 இடங்களில் கொரோனா தடுப்பு மருந்து சேமிப்பதற்கான கட்டுமான வசதி - பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 4 Dec 2020 8:00 PM GMT (Updated: 4 Dec 2020 8:00 PM GMT)

தமிழகத்தில் 2,600 இடங்களில் கொரோனா தடுப்பு மருந்து சேமிப்பதற்கான கட்டுமான வசதி ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

கொரோனா தடுப்பு மருந்தின் சோதனை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்தை சேமிப்பதற்கான வசதிகள் மேற்படுத்தப்பட்டு வருவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் அரசு மருத்துவ மனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தமிழக மருத்துவ பணிகள் கழகம் என அனைத்து மாவட்டங்களிலும் 2 ஆயிரத்து 600 இடங்களில் தடுப்பு மருந்து சேமிப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் 2 கோடிக்கு மேலான கொரோனா தடுப்பு மருந்துகளை உரிய பாதுகாப்புடன் சேமிக்க முடியும். இதனால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பு மருந்து செலுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story