டிசம்பர் 26 முதல் 30-ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகிக்கப்படும் -தமிழக அரசு
டிசம்பர் 26 முதல் 30-ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
சென்னை
தமிழக அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
டிசம்பர் 26 முதல் 30-ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகிக்கப்படும் ரேஷன் கடை ஊழியர்கள் வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்க வேண்டும்.
பொங்கல் பரிசுத்தொகுப்பு, ரூ.2500 ரொக்கம் ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் ரூ.2500யை உறையில் வைத்து வழங்கக்கூடாது
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை ஜன.4-ம் தேதி முதல் 12-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். விடுபட்ட, அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு ஜன.13-ம் தேதியில் பரிசுத்தொகுப்பு, ரொக்கத்தொகை வழங்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story