சென்னை-மதுரை தேஜஸ் சிறப்பு ரயில் வரும் ஜனவரி 4ந்தேதி முதல் ரத்து
சென்னை-மதுரை தேஜஸ் சிறப்பு ரெயில் வரும் ஜனவரி 4ந்தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை,
சென்னை எழும்பூர்-மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் சிறப்பு ரெயில், காலை 6 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மதியம் 12.20 மணிக்கு மதுரை சென்றடையும் வகையில் இயக்கப்பட்டு வந்தது.
இதேபோன்று மறுமார்க்கமாக மதுரை-எழும்பூர் (02614) இடையே தேஜஸ் சிறப்பு ரெயில் மதியம் 3 மணிக்கு மதுரை ரெயில் நிலையத்தில் புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
இந்நிலையில், சென்னை மற்றும் மதுரை இடையே இயக்கப்பட்டு வந்த தேஜஸ் சிறப்பு ரெயில் வரும் ஜனவரி 4ந்தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது என அறிவிப்பு வெளிவந்துள்ளது. ரெயில் பயணிகளிடம் ஆதரவு குறைந்து காணப்படும் சூழலில் ரெயில் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story