கோவையில் காரை வழிமறித்து தொழிலதிபரிடம் 27 லட்சம் ரூபாய் வழிப்பறி - மர்ம நபர்கள் கைவரிசை


கோவையில் காரை வழிமறித்து தொழிலதிபரிடம் 27 லட்சம் ரூபாய் வழிப்பறி - மர்ம நபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 25 Dec 2020 5:28 AM GMT (Updated: 25 Dec 2020 5:28 AM GMT)

கோவையில் காரை வழிமறித்து தொழிலதிபரிடம் 27 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றார்.

கோவை,

ரியல் எஸ்டேட் தொழிலதிபர் அப்துல் சலாம் என்பவர் கோவையில் இருந்து கேரளாவில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அதிகாலை 4:30 மணி அளவில் மதுக்கரை - நவக்கரை நந்திகோவில் அருகே சென்று கொண்டிருந்த போது மர்ம கும்பல் தொழிலதிபர் அப்துல் சலாம் காரை பின் தொடர்ந்த சென்றனர். 

காரை பின் தொடர்ந்த மர்மநபர்கள் தீடிரென காரை நிறுத்தி தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அப்துல் சலாமிடம் இருந்து ரூ.27 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து வழிப்பறி குறித்து மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து மதுக்கரை காவல்துறையினர் வழிப்பறி கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையிலே நடைபெற்ற வழிப்பறி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story