குமரிக்கு இன்று தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு வருகை - சுரே‌‌ஷ்ராஜன் எம்.எல்.ஏ. தகவல்


குமரிக்கு இன்று தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு வருகை - சுரே‌‌ஷ்ராஜன் எம்.எல்.ஏ. தகவல்
x
தினத்தந்தி 27 Dec 2020 1:58 AM GMT (Updated: 27 Dec 2020 1:58 AM GMT)

தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு இன்று குமரி மாவட்டத்திற்கு வர உள்ளதாக சுரே‌‌ஷ்ராஜன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில்,

தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு இன்று குமரி மாவட்டத்திற்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரே‌‌ஷ்ராஜன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தி.மு.க. பொருளாளருமான டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் எம்.பி.க்கள் திருச்சி சிவா, இளங்கோவன் உள்ளிட்டோர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) குமரி மாவட்டம் வருகிறார்கள். அவர்களுக்கு காலை 10.30 மணிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இந்த குழு மாலை 4 மணி முதல் 6 மணி வரை நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் கூடுகிறது. எனவே தேர்தல் அறிக்கையில் குமரி மாவட்டத்துக்கு கொண்டுவர வேண்டிய திட்டங்களையும், பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பொது பிரச்சினைகள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் நேரில் வந்து தெரிவிக்கலாம். 

தேர்தல் அறிக்கை தொடர்பாக உள்ள மனுக்களை மட்டும் தான் அவர்கள் வாங்குவார்கள். மேலும் பொது நலச்சங்கம், வணிக அமைப்புகள், இளைஞர்கள், தொழிலாளர் அமைப்புகள், விவசாய அமைப்புகள், ஆசிரியர் சங்கம், தோழமை இயக்கத்தினர் மற்றும் பொதுமக்களின் நலன் காணும் அமைப்புகளும் நேரடியாக வந்து கூறலாம். எனவே அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story