திமுக தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை மிக முக்கிய அம்சமாக இருக்கும்- மு.க.ஸ்டாலின்
திமுக தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை மிக முக்கிய அம்சமாக இருக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கோவை
கோவை மாவட்டம் தேவராயபுரம் ஊராட்சியில் நடைபெறும் மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்திலேயே கோவையில்தான் அதிக முறைகேடுகள் நடைபெறுகிறது. கிராம சபை கூட்டத்தை தடுத்தாலும், மக்களை சந்திப்பதை தடுக்க முடியாது.அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒருமுறை கூட கிராம சபை கூட்டம் நடத்தப்படவில்லை.12,600-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது
திமுக தேர்தல் அறிக்கையில் மிக முக்கிய அங்கமாக ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை இருக்கும் . திமுக ஆட்சி அமைந்த பிறகு, விசாரணை நடத்தி தண்டனை வாங்கி கொடுப்பது உறுதி.மக்கள் சபை கூட்டத்தில் பெண்கள் அதிகளவில் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என கூறினார்.
Related Tags :
Next Story