குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x
தினத்தந்தி 4 Jan 2021 7:37 PM GMT (Updated: 4 Jan 2021 7:37 PM GMT)

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தென்காசி, 

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மற்றும் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் தினமும் ஆயிரக்கணக்கானோர் குற்றாலம் அருவிகளில் குளித்து செல்கிறார்கள்.

அருவிக்கு செல்லும் முன்பு, உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, சமூக இடைவெளியில் நின்று குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படுகிறது. மலைப்பகுதியில் தொடர்ந்து மழை நீடிப்பதால், நேற்று காலை 10 மணி அளவில் திடீரென மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு வளைவை (ஆர்ச்) தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால், பின்னர் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தனர். மதியம் 1.45 மணிக்கு பழைய குற்றாலம் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் ஐந்தருவி, புலியருவி ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

Next Story