‘நான் பிரச்சினைகளை தீர்ப்பவன்தான்’ - மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு


‘நான் பிரச்சினைகளை தீர்ப்பவன்தான்’ - மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு
x
தினத்தந்தி 13 Jan 2021 5:00 AM GMT (Updated: 13 Jan 2021 5:00 AM GMT)

‘நான் பிரச்சினைகளை தீர்ப்பவன்தான்’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:-

மு.க.ஸ்டாலின் கிராமசபை நடத்துகிறாரே அதனால் என்ன பயன், அவர் என்ன பிரச்சினையைத் தீர்க்கப் போகிறாரா? என்று சில நாட்களுக்கு முன் கேட்டார் முதல்-அமைச்சர். ஆம் நான் பிரச்சினைகளை தீர்ப்பவன்தான். இதோ ஓர் ஆதாரம்.

கவுண்டம்பாளையம் தொகுதி வெள்ளக்கிணறுவில் நடைபெற்ற கிராம சபையில் அதிக வரி செலுத்தும் எங்கள் வீதியில் தெரு விளக்கு இல்லாததை 9 ஆண்டுகளாக ஆளும் எம்.எல்.ஏ.வால் கண்டுகொள்ளப்படவில்லை என்று ஒருவர் சொன்னார். இன்று அரசு சார்பில் தெரு விளக்கு அமைத்துக் கொடுத்துள்ளார்கள்.

யாரிடம் சொன்னால் வேலை நடக்கும் என்பது மக்களுக்குத் தெரியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story