மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை: முதலமைச்சர் பழனிசாமி
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால், மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகள் முழுக்கொள்ளளவை எட்டி உள்ளன. இதன்படி பாபநாசம், மணிமுத்தாறு, கடனா, ராமாநதி சேர்வலாறு அணைகளிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வருவதால் 60,000 கனஅடி நீர் தாமிரபரணியில் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகின்றது. இதனால் அங்கு வசிக்கும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசின் சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்க போர்க்கால அடிப்படையில் செயல்பட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்தவும் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story