அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காண திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகை
ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவனியாபுரம் வந்தார்.
மதுரை,
உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் 788 காளைகளும், 430 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகுந்த கவனத்தோடு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் அவனியாபுரத்திற்கு வந்துள்ளனர். அந்த வகையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண அவனியாபுரம் வந்தார்.
அங்குள்ள பார்வையாளர்கள் பகுதியில் இருந்து ஜல்லிக்கட்டு போட்டியை அவர் பொதுமக்களுடன் இணைந்து கண்டு மகிழ்ந்தார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண வரவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story