சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி


சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 14 Jan 2021 10:17 AM GMT (Updated: 14 Jan 2021 11:21 AM GMT)

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்

சேலம்:

2 நாள் பயணமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் சென்றுள்ளார். . முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
அங்குள்ள முருகன் கோயிலில் வழிபாடு நடத்திய முதலமைச்சர் குடும்பத்தினர், பொதுமக்களுடன் இணைந்து பொங்கலை கொண்டாடினார்.

விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள், அதிமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் மற்றும் இனிப்புகளை வழங்கிய முதலமைச்சர் பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

பின்னர், சப்பானிப்பட்டி என்ற கிராமத்தில் அருந்ததியர் காலனியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டார், அங்கு, பெண்கள், பொங்கல் வைத்து வழிபட்டனர்.

சக்தி மாரியம்மன்ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் முதலமைச்சர் கலந்து கொண்டார், பிறகு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தாமும் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

Next Story