மதுரை பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி


மதுரை பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி
x
தினத்தந்தி 15 Jan 2021 2:11 AM GMT (Updated: 15 Jan 2021 2:11 AM GMT)

மாட்டுப் பொங்கல் தினத்தை முன்னிட்டு மதுரை பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

மதுரை,

மாட்டுப் பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை பாலமேட்டில் இன்று காலை 8 மணிக்கு துவங்க இருக்கிறது. இந்த போட்டியில் 800 காளைகள் பங்கேற்க தயார் நிலையில் உள்ளன. காளைகளின் வயது, எடை, உடல்நிலை உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதே சமயம் 651 மாடுபிடி வீரர்கள் இன்றைய ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு மாடுகளை அடக்க தயாராக உள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு சுமார் 25 வீரர்கள் என்ற வகையில் மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்பட உள்ளனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டி மதுரை பாலமேட்டில் இன்று மாலை 4 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைக் காண பொது மக்கள் திரளான அளவில் அந்த பகுதிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். பார்வையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு தக்க பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் சுமார் 2 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Next Story