ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து 37 ஆயிரத்து 528 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,
சென்னையில் தங்கம் விலையானது கடந்த 2 வாரமாக குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதன் தொடா்ச்சியாக சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.37,208-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.4,691க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.37,528க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.20 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.72.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.72,500க்கும் விற்பனையாகிறது.
Related Tags :
Next Story