தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் - தொல்லியல் துறையினர் கள ஆய்வு + "||" + Archaeological excavations in 7 districts of Tamil Nadu - Archaeologists field study
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் - தொல்லியல் துறையினர் கள ஆய்வு
கங்கை கொண்ட சோழபுரத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்கு இடம் தேர்வுக்கான முதற்கட்ட ஆய்வுப் பணிகளை தமிழக தொல்லியல் துறையினர் மேற்கொண்டனர்.
அரியலூர்,
தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான அகழ்வாராய்ச்சிப் பணிகள் தமிழகம் முழுவதும் கீழடி, ஆதிச்சநல்லூர், கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் தொடங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் அதன் சுற்றுப்புரங்களில் தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் அகழாய்விற்கு இடம் தேர்வு செய்யும் பணிகள் தொடங்கின.
முதற்கட்டமாக கங்கை கொண்ட சோழபுரத்தை சுற்றுயுள்ள பொன்னேரி, மாளிகை மேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆளில்லா சிறிய ரக விமானத்தின் மூலம் மற்றும் தொழில்நுட்ப கருவிகள் கொண்டு ஒளிப்பதிவு செய்யப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது குறித்து தமிழக தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் அளித்த பேச்சியில், கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் மாளிகை வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் திருவாரூர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்களைக் கொண்டு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அந்த ஆய்வறிக்கைகள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார்.
தமிழகத்தில் கொரோனா விதிமீறல் தொடர்பான வழக்குகள் ரத்து செய்யப்பட்டது குறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தமிழக அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டு முழுமையான விமான சேவைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உடல்நலக்குறைவு, விபத்துகளில் உயிரிழந்த 64 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.