தமிழகத்தில் இதுவரை 59 ஆயிரத்து 226 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி + "||" + Corona vaccination for 59 thousand 226 health workers in Tamil Nadu so far
தமிழகத்தில் இதுவரை 59 ஆயிரத்து 226 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் இதுவரை 59 ஆயிரத்து 226 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் நேற்று 168 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் 16 ஆயிரத்து 800 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த தடுப்பு மருந்து தயாராக வைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் 7 ஆயிரத்து 381 பேருக்கு ‘கோவிஷீல்டு' தடுப்பு மருந்தும், 194 பேருக்கு ‘கோவேக்சின்' தடுப்பு மருந்தும் என மொத்தம் 7 ஆயிரத்து 575 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
அந்தவகையில் தமிழகத்தில் இதுவரை 57 ஆயிரத்து 965 பேருக்கு ‘கோவிஷீல்டு' தடுப்பூசியும், 1,261 பேருக்கு ‘கோவேக்சின்' தடுப்பூசி என 59 ஆயிரத்து 226 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.