தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 523 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 523 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 26 Jan 2021 1:57 PM GMT (Updated: 26 Jan 2021 1:57 PM GMT)

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 523 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழக சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 523 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.  இதனால் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 8 லட்சத்து 35 ஆயிரத்து 803 ஆக உயர்வடைந்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை சமீப காலங்களாக குறைந்து வருகிறது.  சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.  கொரோனா பாதிப்புகளால் கடந்த 24 மணிநேரத்தில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,325 ஆக உள்ளது.  கொரோனா பாதிப்புகளில் இருந்து இன்று 595 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  இதனால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 18 ஆயிரத்து 742 ஆக உயர்ந்து உள்ளது.  கொரோனா பாதிப்புகளுக்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,736 ஆக குறைந்து உள்ளது.

Next Story