“தமிழகம் முழுவதும் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்வார்” - தேமுதிக துணை பொதுச் செயலாளர் சுதீஷ் பேட்டி


“தமிழகம் முழுவதும் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்வார்” - தேமுதிக துணை பொதுச் செயலாளர் சுதீஷ் பேட்டி
x
தினத்தந்தி 27 Jan 2021 11:24 AM GMT (Updated: 27 Jan 2021 11:24 AM GMT)

தமிழகம் முழுவதும் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்வார் என தேமுதிக துணை பொதுச் செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.

வேலூர்,

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சி பொதுக்கூட்டம், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தேமுதிகவின் கூட்டணி மற்றும் பிரச்சார வியூகம் குறித்து அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் சுதீஷ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தேமுதிக தற்போது வரை அதிமுக கூட்டணியில் உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வார் என்றும் அவர் கூறினார். அதிமுகவினர் தங்களை இதுவரை கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்த நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story