சென்னையில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி


சென்னையில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 31 Jan 2021 4:05 AM GMT (Updated: 31 Jan 2021 4:05 AM GMT)

சென்னையில் போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னை, 

இந்தியா முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
 
தமிழகத்தில் உள்ள 5 வயதுக்கு உட்பட்ட 70.20 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை முதலமைச்சர் வழங்கினார். சொட்டு மருந்து வழங்கிய பின் குழந்தைகளுக்கு பொம்மைகளை பரிசாக முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

Next Story