தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கிட அனுமதி


தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கிட அனுமதி
x
தினத்தந்தி 2 Feb 2021 7:14 AM GMT (Updated: 2 Feb 2021 9:10 AM GMT)

தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை,

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. முதல்கட்டமாக நாடு முழுவதும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் போன்ற முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கிட அரசு அனுமதி அளித்துள்ளது.  150 க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி தடுப்பூசி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 34 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 

Next Story