தமிழகத்தில் 477 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் 477 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னை,
தமிழக சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் 477 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 41 ஆயிரத்து 326 ஆக உயர்வடைந்து உள்ளது.
503 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர். இதனால், மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 24 ஆயிரத்து 527 ஆக உயர்வடைந்து உள்ளது. சமீப நாட்களாக கொரோனா பாதிப்புகளால் உயிரிழப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இதன்படி, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 382 ஆக உள்ளது. 4,417 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story