திண்டிவனம் அருகே கார் மரத்தில் மோதி விபத்து 4 பேர் பலி


திண்டிவனம் அருகே கார் மரத்தில் மோதி விபத்து 4 பேர் பலி
x
தினத்தந்தி 8 Feb 2021 11:57 AM GMT (Updated: 8 Feb 2021 11:57 AM GMT)

திண்டிவனம் அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திண்டிவனம்: 

சேலம் தளவாய்ப்பட்டியை அடுத்த பெத்தநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் குருநாதன்.  தனது குடும்பத்தினருடன் சென்னை மேடவாக்கத்தில் வசித்து வந்தார். கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற உறவினர் திருமண விழாவுக்காக மனைவி, மகன், மற்றும் சகோதரருடன் காரில் சென்ற குருநாதன் மீண்டும் சென்னை திரும்பி கொண்டிருந்தார்.

இவர்களின் கார் திண்டிவனத்தை அடுத்த பாதிரி கிராமத்தை கடந்த போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் குருநாதனின் சகோதரர் செந்தில்நாதன் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகிறார்கள்.


Next Story