தீவிர அரசியலில் ஈடுபடுவேன் - ஆதரவாளர்கள் மத்தியில் சசிகலா பேச்சு


தீவிர அரசியலில் ஈடுபடுவேன் - ஆதரவாளர்கள் மத்தியில் சசிகலா பேச்சு
x
தினத்தந்தி 8 Feb 2021 12:43 PM GMT (Updated: 8 Feb 2021 12:43 PM GMT)

தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்றும் விரைவில் எல்லோரையும் சந்திப்பேன் என்றும் ஆதரவாளர்கள் மத்தியில் சசிகலா தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி, 

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி சசிகலா விடுதலையானார். தற்போது தண்டனை காலத்தை முடித்துக் கொண்டு சசிகலா சென்னை வந்துகொண்டிருக்கிறார். தற்போது கிருஷ்ணகிரி கந்திகுப்பம் அருகே வந்து கொண்டிருக்கிறார். அங்கு அவரது ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என கிருஷ்ணகிரியில் ஆதரவாளர்கள் மத்தியில் சசிகலா பேசினார். மேலும் அன்புக்கு நான் அடிமை; கொண்ட கொள்கைக்கு நான் அடிமை. தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் அடிமை. ஆனால் அடக்குமுறைக்கு நான் என்றுமே அடிபணிய மாட்டேன். மிக விரைவில் எல்லோரையும் சந்திக்கிறேன், அப்போது சொல்கிறேன்” என்று கூறினார். 

Next Story