மதுரையில் கனிமொழி 2 ஆம் நாள் பிரசாரம் - நெசவாளர்களை சந்தித்து பேசினார்


மதுரையில் கனிமொழி 2 ஆம் நாள் பிரசாரம் - நெசவாளர்களை சந்தித்து பேசினார்
x
தினத்தந்தி 9 Feb 2021 9:32 AM GMT (Updated: 9 Feb 2021 9:32 AM GMT)

செல்லூர் பகுதியில் இயங்கி வரும் தறி கூடத்தை பார்வையிட்ட கனிமொழி, அங்குள்ள தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மதுரை, 

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் திமுக மகளிரணி செயலாலர் கனிமொழி, தனது 2-ம் நாள் பிரச்சாரத்தை, மதுரையில் உள்ள செல்லூர் பகுதியில் தொடங்கினார். அங்குள்ள தனியார் மண்டபத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களிடம் கலந்துரையாடல் நடத்தி அவர்களிடம் கோரிக்கை மனுக்கள பெற்றார்.

இதன் பின்னர் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கனிமொழி, மத்திய அரசு என்ன செய்தாலும் பதவியை காப்பதற்காக தமிழக அரசு தலையாட்டுகிறது என்று விமர்சித்தார். திமுக ஆட்சிக்கு வந்தால் நீர்நிலைகள் முறையாக தூர்வாரப்படும் என்றும் கனிமொழி உறுதியளித்தார். 

இதையடுத்து செல்லூர் கண்மாய் பகுதியை பார்வையிட வந்த கனிமொழியை அப்பகுதி மக்கள் மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதனை தொடர்ந்து செல்லூர் பகுதியில் இயங்கி வரும் தறி கூடத்தை பார்வையிட்ட கனிமொழி, அங்குள்ள தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதன் பின்னர் நெசவாளர்களுடன் ராட்டையில் சிறிது நேரம் நூல் சுற்றி மகிழ்ந்தார். 

Next Story