உயிரிழந்தவர்களுக்கு தமிழக கவர்னர் இரங்கல்


உயிரிழந்தவர்களுக்கு தமிழக கவர்னர் இரங்கல்
x
தினத்தந்தி 12 Feb 2021 10:18 PM GMT (Updated: 12 Feb 2021 10:18 PM GMT)

உயிரிழந்தவர்களுக்கு தமிழக கவர்னர் இரங்கல்.

சென்னை, 

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். இதற்கு அனுதாபம் தெரிவித்து தமிழக கவர்னர் பன்வாரிலால்புரோகித் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

பட்டாசு ஆலை வெடி விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர், 30 பேர் படுகாயம் அடைந்தனர் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன்.

இந்த விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று தமிழக மக்களோடு சேர்ந்து நானும் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story