தொடர்ந்து உச்சம்: பெட்ரோல், டீசல் விலை 4-வது நாளாக உயர்வு


தொடர்ந்து உச்சம்: பெட்ரோல், டீசல் விலை 4-வது நாளாக உயர்வு
x
தினத்தந்தி 12 Feb 2021 10:55 PM GMT (Updated: 12 Feb 2021 10:55 PM GMT)

பெட்ரோல், டீசல் விலை அவ்வப்போது விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொடுகிறது.

சென்னை, 

பெட்ரோல், டீசல் விலை அவ்வப்போது விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொடுகிறது. கடந்த 6, 7 மற்றும் 8-ந் தேதிகளில் விலை மாற்றம் இல்லாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை 9-ந் தேதியில் இருந்து மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்று முன்தினம் ரூ.90-ஐ தாண்டியது.

இந்த நிலையில் தொடர்ந்து 4-வது நாளாக நேற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து இருந்தது. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 26 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் 90 ரூபாய் 44 காசுக்கு விற்பனை ஆனது. டீசல் விலையை பொறுத்தவரையில், லிட்டருக்கு 34 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் 83 ரூபாய் 52 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கலக்கத்தில் உள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வரவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Next Story