வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயிலில் இன்று இலவசமாக பயணிக்கலாம்


வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயிலில் இன்று இலவசமாக பயணிக்கலாம்
x
தினத்தந்தி 14 Feb 2021 4:00 AM GMT (Updated: 14 Feb 2021 4:00 AM GMT)

சென்னையில் வண்ணாரப்பேட்டை -திருவொற்றியூர் விம்கோநகர் இடையே மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் நரேந்திரமோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

சென்னை, 

சென்னையில் வண்ணாரப்பேட்டை -திருவொற்றியூர் விம்கோநகர் இடையே மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் நரேந்திரமோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வைக்கிறார். இதையொட்டி பயணிகள் இலவசமாக மெட்ரோ ரெயிலில் பயணிப்பதற்கான அனுமதியை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் விம்கோநகர் இடையே மெட்ரோ ரெயில் பகுதி-1 விரிவாக்க வழித்தடத்தில் இன்று முதல் சேவை தொடங்க இருக்கிறது. இதையொட்டி வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையே இன்று மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை பயணிகள் இலவசமாக பயணிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story