சென்னையில் பிரதமர் மோடியுடன் பங்காரு அடிகளார் சந்திப்பு


சென்னையில் பிரதமர் மோடியுடன் பங்காரு அடிகளார் சந்திப்பு
x
தினத்தந்தி 14 Feb 2021 10:44 AM GMT (Updated: 14 Feb 2021 10:44 AM GMT)

சென்னை வந்த பிரதமர் மோடியை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் பங்காரு அடிகளார் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

சென்னை,

பிரதமர் மோடி மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்க சென்னை வந்தார். காலையில் விமானம் மூலம் வந்த அவர், விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை அடையாறு ஐ.என்.எஸ் தளத்திற்குச் சென்றார்.

பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் நேரு உள் விளையாட்டரங்கம் வந்தடைந்தார். பிரதமர் வரும் வழி எங்கும் அதிமுக, பாஜக தொண்டர்கள் அவருக்குக் கொடி அசைத்து வரவேற்பு அளித்தனர்.

பின்னர் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வரவேற்புரையாற்றினார். அடுத்து முதல்-அமைச்சர் பழனிசாமி பேசினார். பிரதமர் நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசினார்.

நிகழ்ச்சி முடிந்ததும் பின்னர் சென்னை வந்த பிரதமர் மோடியை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் பங்காரு அடிகளார் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இதுபோலவே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்-அமைச்சர் பழனிசாமி உள்ளிட்டோரும் பிரதமர் மோடியை சந்தித்து சிறிது நேரம் அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

Next Story