இயற்கை எழில் மிகு சேப்பாக்கம் மைதானத்தை படம்பிடித்த பிரதமர் மோடி!
ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் திரும்பிய போது சேப்பாக்கம் மைதானத்தை பிரதமர் மோடி படம்பிடித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை,
பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்தார் .நேரு உள்விளையாடு அரங்கத்திற்கு காரில் வந்தடைந்த பிரதமர் மோடி மேடையில் இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் சென்னை வந்த பிரதமருக்கு முதல்-அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசை வழங்கினார்கள். மேலும் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதனிடையே இன்று இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று சென்னை வந்த பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் இருந்தபடியே இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியை பார்வையிட்டுள்ளார். சேப்பாக்கம் மைதானத்தின் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Caught a fleeting view of an interesting test match in Chennai. 🏏 🇮🇳 🏴 pic.twitter.com/3fqWCgywhk
— Narendra Modi (@narendramodi) February 14, 2021
Related Tags :
Next Story