மே 3ம் தேதி முதல் பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு; தமிழக அரசு அறிவிப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சம் மாணவ மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. தொற்று பரவல் குறைந்தையடுத்து கடந்த ஜனவரி 19 ஆம் தேதி முதல் பிளஸ்-2 வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
பொதுத்தேர்வு நடைபெறும் தேதி எப்போது வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில், தமிழக அரசு பொதுதேர்வுக்கான கால அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி, வரும் மே மாதம் 3 ஆம் தேதி துவங்கும் பொதுத்தேர்வு 21 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- மே 3- மொழித்தாள்,
- மே 5- ஆங்கிலம்
- மே 7: கணிணி அறிவியல், உயிரி அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல் தேர்வுகள்
- மே 11- இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம்
- மே 17- கணிதம், விலங்கியல்
- மே19- உயிரியியல் வரலாறு
- மே 21- வேதியியல், கணக்குப்பதிவியல் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறும்
காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சம் மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.
Related Tags :
Next Story