பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு


பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து  திமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Feb 2021 7:58 AM GMT (Updated: 17 Feb 2021 7:58 AM GMT)

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 22 ஆம் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

சென்னை,

இந்தியாவில் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  பெட்ரோல் விலை ரூபாய் 100 நெருங்குவதால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரிப்பதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். பெட்ரோல், விலை உயர்வுக்கு அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்த நிலையில் தற்போது பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து வரும் 22-ஆம் தேதி தமிழகத்தில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக மாவட்ட செயலாளர்கள் தலைமையில், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. 

Next Story