எங்களை மீறி அரசியலில் யாரும் எதுவும் செய்துவிட முடியாது- டிடிவி தினகரன்
எடப்பாடி பழனிசாமியின் நான்கு ஆண்டு கால ஆட்சிக்கு மக்கள் தேர்தலில் பதில் அளிப்பார்கள். தங்களை மீறி அரசியலில் யாரும் எதுவும் செய்துவிட முடியாது என டிடிவி தினகரன் கூறினார்.
நாமக்கல்
நாமக்கல்லில் நிருபர்களிடம் பேசிய அம்ம மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது:-
திமுகதான் எங்களுக்கு அரசியல் எதிரி, அந்த கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என்ற நோக்கில் அமமுக செயல்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி ஆட்சி மீண்டும் அமையாது, ஜெயலலிதா ஆட்சிதான் அமையும் .
மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி சசிகலா ஓய்வு எடுத்து வருகிறார். ஓய்வுக்கு பிறகு அனைத்திற்கும் அவர் பதில் சொல்வார. எடப்பாடி பழனிசாமியின் நான்கு ஆண்டு கால ஆட்சிக்கு மக்கள் தேர்தலில் பதில் அளிப்பார்கள். தங்களை மீறி அரசியலில் யாரும் எதுவும் செய்துவிட முடியாது.
சசிகலா வெளியில் வந்தால் மாற்றம் வரும் என யாரும் சொல்லவில்லை, ஊடகங்கள் தான் தெரிவித்தது; மருத்துவர்கள் சசிகலாவை ஓய்வு எடுக்கச் சொன்னதால் அவர்கள் ஓய்வு முடிந்த பிறகு வெளியே வருவார் என டிடிவி தினகரன் கூறினார்.
Related Tags :
Next Story