பெட்ரோல், டீசல் விலை 10-வது நாளாக உயர்வு
பெட்ரோல், டீசல் விலை கடந்த 8-ந்தேதி வரை மாற்றம் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் அதற்கு மறு நாளில் (9-ந்தேதி) இருந்து அதன் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் நேற்றும் அதன் விலை உயர்ந்து உச்சத்தில் இருந்தது.
பெட்ரோல் விலையை பொறுத்தவரையில், நேற்று முன்தினம் ஒரு லிட்டர் 91 ரூபாய் 68 காசுக்கு விற்பனை ஆனது. நேற்று லிட்டருக்கு 30 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் 91 ரூபாய் 98 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல், நேற்று முன்தினம் ஒரு லிட்டர் 85 ரூபாய் 1 காசுக்கு விற்பனையான டீசல் விலை, நேற்று லிட்டருக்கு 30 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் 85 ரூபாய் 31 காசுக்கு விற்பனை ஆனது.
கடந்த 10 நாட்களாக பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி, 10 நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாய் 59 காசும், டீசல் 2 ரூபாய் 98 காசும் உயர்ந்திருக்கிறது.
Related Tags :
Next Story