தமிழகத்தில் இன்று 452- பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்று 452-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் இன்று 452- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8,48,275 ஆக உள்ளது. சென்னையில் 154 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து இன்று 460- பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 8,31,706- ஆக உள்ளது. கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் அரசு மருத்துவமனையில் 3 பேர், தனியார் மருத்துவமனையில் யாரும் உயிரிழக்கவில்லை. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,460 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 4138 பேர் உயிரிழந்துள்ளனர்.
Related Tags :
Next Story