குஜராத்தில் ஆம் ஆத்மி வெற்றி: உடைக்க முடியாத இரும்புக் கோட்டை என்று ஜனநாயகத்தில் எதுவும் இல்லை - கமல்ஹாசன்


குஜராத்தில் ஆம் ஆத்மி வெற்றி: உடைக்க முடியாத இரும்புக் கோட்டை என்று ஜனநாயகத்தில் எதுவும் இல்லை - கமல்ஹாசன்
x
தினத்தந்தி 23 Feb 2021 6:16 PM GMT (Updated: 23 Feb 2021 6:16 PM GMT)

குஜராத்தில் ஆம் ஆத்மி வென்றுள்ள இடங்கள், உடைக்க முடியாத இரும்புக் கோட்டை என்று ஜனநாயகத்தில் எதுவும் இல்லை என்பதைக் காட்டுவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

குஜராத் மாநிலம் சூரத் மாநகராட்சி தேர்தலில் 27 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.

இந்நிலையில் குஜராத்தில் தேர்தலில் ஆம் ஆத்மி வென்றுள்ள இடங்கள், உடைக்க முடியாத இரும்புக் கோட்டை என்று ஜனநாயகத்தில் எதுவும் இல்லை என்பதைக் காட்டுவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி வென்றுள்ள இடங்கள் உடைக்க முடியாத இரும்புக் கோட்டை என்று ஜனநாயகத்தில் எதுவும் இல்லை என்பதைக் காட்டுகிறது. மக்கள் நலனை முன்னிருத்தி களமாடுபவர்களை மக்கள் கைவிட்டதே இல்லை. தமிழகத்திலும் இது நிகழும்” என்று பதிவிட்டுள்ளார்.





Next Story