கடற்கரை-செங்கல்பட்டு மார்க்கத்தில் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு


கடற்கரை-செங்கல்பட்டு மார்க்கத்தில் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 24 Feb 2021 5:24 AM GMT (Updated: 24 Feb 2021 5:24 AM GMT)

கடற்கரை-செங்கல்பட்டு மார்க்கத்தில் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை,

செங்கல்பட்டு-தாம்பரம் இடையே 3-வது ரெயில் பாதை அமைக்கும் பணி இன்று (புதன்கிழமை) முதல் நடைபெற உள்ளது. இந்த பணியின் காரணமாக கடற்கரை-செங்கல்பட்டு-காஞ்சீபுரம்-அரக்கோணம் மார்க்கத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை காலஅட்டவனையில் இன்று (புதன்கிழமை) முதல் மார்ச் மாதம் 13-ந்தேதி வரை 18 நாட்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த பணிகள் காரணமாக புதிய திருத்தப்பட்ட கால அட்டவனை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அட்டவனை இன்று முதல் மார்ச் 13-ந்தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story