27 ந்தேதி முதல் 3 நாட்கள் ராகுல்காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம்


27 ந்தேதி முதல் 3 நாட்கள் ராகுல்காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம்
x
தினத்தந்தி 25 Feb 2021 12:33 PM GMT (Updated: 25 Feb 2021 12:33 PM GMT)

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் 3-வது கட்டமாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

சென்னை

ராகுல்காந்தி  27-ந்தேதி முதல் மார்ச் 1-ந்தேதி வரை தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழக காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ராகுல்காந்தி 27 ந்தேதி தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், நாங்குநேரி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்வார் என்றும், 28-ந்தேதி பாளையங்கோட்டை, நெல்லை, ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டை கடையநல்லூர், புளியங்குடி, தென்காசி, கடையம், அம்பை, சேரன்மகாதேவி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ஊர்களில் ஆதரவு திரட்டுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 1-ந்தேதி குமரி மாவட்டத்தில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story